எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, ஜன,9- வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற ஆளும் அவாமி லீக் கட்சி, மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. வங்கதேசத்தில் அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்க மறுத்தது. இதையடுத்து கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி, ஜமாத் – இ – இஸ்லாமி உள்பட 18 கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.
எனினும், ஜனவரி 5-ம் தேதி 300 தொகுதிகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடந்தது. இதில் 147 தொகுதிகளில் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளில் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, வாக்குப் பதிவின் மூலம் 104 தொகுதிகளிலும், போட்டியின்றி 127 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அக்கட்சி மொத்தம் 231 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை இரவு தெரிவித்தது. இந்த தேர்தலில் அவாமி லீக்கின் கூட்டணிக் கட்சியான ஜாதியா கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலை புறக்கணித்து எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தியதால், வாக்குப் பதிவின்போது பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. 21 பேர் கொல்லப்பட்டனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. 40 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் கட்சிகள் அனைத்தும் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். இது தொடர்பாக பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஒப்பந்தம் ஏற்படாதது வருத்தமளிக்கிறது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையிலான தேர்தல் நடைபெற்றிருக்கும்.
அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதுடன் அமைதியான, சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா. சபை உதவும்” என்றார். காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கூறுகையில், “வங்கதேச மக்கள் தங்களின் விருப்பங்களை தெரிவிக்க வாய்ப்பளிக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், “மொத்த தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். சட்டம் – ஒழுங்கை பராமரிக்க ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வங்கதேச மக்கள் அனைவரும் சுதந்திரமாக தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஆளும் கட்சி ஏற்படுத்தித் தர வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துகளை வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும்.
அந்நாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நியாயமான, நேர்மையான முறையில் மறுதேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.