முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னி ஓபன்: அரை இறுதியில் பொபண்ணா - குரேஷி ஜோடி

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி , ஜன. 10 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிட்னி ஓபன் சர்வதேச போட்டியின் ஆடவர் காலிறுதியில் பொபண்ணா _ குரேஷி ஜோடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. 

ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான சிட்னி ஓபன் டென்னிஸ் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

ஆஸி. ஓபனுக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் இந்தப் போட்டியில்பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்து உள்ளனர். 

சர்வதேச போட்டியான இதில் பங்கேற்று வரும் அவர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

இந்தியாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ்டுகளில்  ஒருவரான ரோகன் பொபண்ணா இந்தப் போட்டியில் பாக். வீரர் குரேஷியுடன் இணைந்து ஆடி வருகிறார். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் கால் இறுதிச் சுற்று ஒன்று நடந்தது. இதில் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடியும், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் இணையும் மோதின. 

3 செட் வரை நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் டோமினிக் மற்றும்  டிராட் ஹீப் இணை அபாரமாக ஆடி 7_6, (7), 6_7(7), 10_3 என்ற செட் கணக்கில் இந்திய மற்றும்  பாக். ஜோடியை வென்றது. 

முன்னதாக நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த லியாண்டர் பயஸ் மற்றும் செக். குடியரசைச் சேர்ந்த ரேடக் ஸ்டீபானக் ஜோடியும் பிரான்ஸ் இணையும் மோதின. 

இதில் பிரான்சைச் சேர்ந்த ஜூலியன் பென்னட்டா மற்றும் ரோஜர் வாசெலின் இணை சிறப்பாகஆடி, 6_4, 6_4 என்ற நேர் செட் கணக்கில் இந்திய மற்றும் செக். ஜோடியை வென்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்