முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலையை உயர்த்தினால் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      வர்த்தகம்
Image Unavailable

சேலம் மே.22​- டீசல் விலையை உயர்த்தினால் உயர்த்திய நாள் முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஷ்ணமுகப்பா தெரிவித்துள்ளார்.சேலத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் நிருபர்களுக்கு பேட்டிளியத்தார்.அப்போது அவர் கூறியதாவது.டீசல் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.கச்சா எண்ணெய் விலை 100 டாலர் இருந்த போது கூட விலையை உயர்த்தவில்லை.சென்னையில் டீசலின் லேண்ட் காஸ்ட் 46 ரூபாய்தான் வரி ரூ.30 போடுகிறார்கள். டீசல் விலையை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. அரசிடம் டீசல் மீதான வரியை குறைக்க கேட்டிருக்கிறோம்.டீசல் விலை என்று உயர்த்தப்படுகிறதோ அன்று முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடத்த வேண்டும் என சிந்தனையில் இருக்கிறோம்.

எங்களின் அகில இந்திய மோட்டார் காங்கிரசின் செயற்குழு கூட்டம் டெல்லியில் வரும் 23 ந் தேதி நடைபெறுகிறது.அதில் முடிவு எடுக்க உள்ளோம்.தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ப்ரீமியம் தொகையை 68 சதவீதம் உயர்த்தி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். 

சேலம் டோலை அகற்ற சொல்லி மத்திய அரசிடம் நாங்கள் வைத்த கோரிக்கை 90 சதவீதம் ஏற்கப்பட்டிருக்கிறது.விரைவில் டோல்கேட்டை மாற்றி அமைக்கும் முயற்ச்சியில் அந்த நிறுவனம் ஈடுபடும். அப்படி இல்லையென்றால் மாபெரும் போராட்டத்தை டோல் நிறுவனம் சந்திக்க வேண்டியது இருக்கும்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மட்டும்தான் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.மண்ணெய்க்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.16 மானியம் தருகிறார்கள். அந்த மானியம் இன்றுவரை தொடர்களிறது. மண்ணெண்ணெய் மானியத்தை குறைத்தால் டீசல் விலை குறையும்.

டீசல் விலை உயரும்போதெல்லாம் உணவு பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.டீசல் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தால் நாங்கள் உயர்த்தும் விலையை கொடுக்க தயாராக உள்ளோம். 1998 முதல் சாலையை பழுது பார்க்கும் வரியை மத்திய அரசு போடப்பட்டிருக்கிறது. அதில் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் டீசல் மீது ரூ.14.50 ம்,கர்நாடகாவில் ரூ.17.50 வரி இருக்கிறது. மத்திய,மாநில அரசுகள் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வது வரை படித்து இருந்தால்தான் டிரைவிங் லைசன்சு கிடைக்கும் என்பதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago