முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 நாடுகள் பங்கேற்கும் கபடி போட்டிக்கு முதல்வர் நிதி உதவி

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.17 - சென்னையில் கபடி போட்டிகளை நடத்துவதற்கு ரூ.1 கோடியும், ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு  ரூ.75 லட்சமும் அரசின் மானியமாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

மேலும் தமிழ்நாட்டில் 16 இடங்களிலுள்ள உடற்பயிற்சி கூடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சமுதாய எழுச்சியை ஏற்படுத்தவும் தேசிய பெருமிதம் மற்றும் ஒற்றுமையினை வளர்க்கக்கூடிய சக்தி வாய்ந்ததாகவும் விளையாட்டு விளங்குகிறது. அத்தகைய விளையாட்டினை சமூகத்தின் நிகழ்கால மற்றும் எதிர்கால முதலீடாக கருதி பல்வேறு முன்னேற்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் விளையாட்டிற்கென  முதலமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று 2005ஆம் ஆண்டு விளையாட்டிற்கென தனிப் பல்கலைக்கழகம் ஒன்று முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர்  ஜெயலலிதா முதல் முறை முதலமைச்சராக இருந்த போது தான் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன. இது மட்டுமன்றி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ஊக்கத் தொகை, மாவட்டம் தோறும் விளையாட்டரங்கங்கள் அமைத்தல், கிராம விளையாட்டுக்களை ஊக்குவித்தல், உடற்பயிற்சி  மையங்கள் அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், குறிப்பாக கிராம மக்களிடையே, மிகவும் பிரபலமான விளையாட்டு கபாடியாகும்.  இந்த விளையாட்டுக்கான உலக அளவிலான போட்டிகள் சென்னை மாநகரில் வரும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 4வது வாரத்தில்  நடைபெற உள்ளது.  இந்த போட்டிகளில் இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், நேபாளம், <ரான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா, சைனீஸ் தைபே, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 20 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி அணிகள் கலந்து கொள்ளும்.  சென்னையில் நடக்கும் இப்போட்டிகளை நடத்துவதற்கு அரசு மானியமாக 1 கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிக அளவில் உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டரங்கங்கள்  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் வருகிற 2014_ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசியாவிலேயே முதன் முறையாக 8_வது உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் வாகையர் போட்டிகள் நடைபெற உள்ளன.  

இப்போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, கிரேட் பிரிட்டன், ஹாங்காங், சீனா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, அயர்லாந்து, எகிப்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா, நைஜிரியா, ஸ்பெயின் மற்றும் நியுசிலாந்து ஆகிய 19 நாடுகளை சார்ந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  உலக அளவிலான இந்த போட்டிகளை சென்னையில் நடத்திட  முதலமைச்சர் ஜெயலலிதா 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு விளையாட்டு வீரரும், வீராங்கனையும்  பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு மிகவும் அடிப்படை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் ஆகும்.  

தினந்தோறும் செய்யும் உடற்பயிற்சியின் மூலமே இதனைப் பெறமுடியும். எனவே இளைஞர்கள், சிறார்கள், ஆண்கள் மற்றும்  பெண்கள் நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை நகரில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மற்றும் மதுரை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய 16 இடங்களில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கங்கள் என 17 இடங்களில் 1,500 முதல் 2,000 சதுர அடி பரப்பளவில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க 1 கோடியே 50 லட்சம் ரூபாய், இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கான உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காக 2 கோடியே 55 லட்சம் ரூபாய் என 4 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago