எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.17 - சென்னையில் கபடி போட்டிகளை நடத்துவதற்கு ரூ.1 கோடியும், ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு ரூ.75 லட்சமும் அரசின் மானியமாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் 16 இடங்களிலுள்ள உடற்பயிற்சி கூடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_
நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சமுதாய எழுச்சியை ஏற்படுத்தவும் தேசிய பெருமிதம் மற்றும் ஒற்றுமையினை வளர்க்கக்கூடிய சக்தி வாய்ந்ததாகவும் விளையாட்டு விளங்குகிறது. அத்தகைய விளையாட்டினை சமூகத்தின் நிகழ்கால மற்றும் எதிர்கால முதலீடாக கருதி பல்வேறு முன்னேற்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் விளையாட்டிற்கென முதலமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று 2005ஆம் ஆண்டு விளையாட்டிற்கென தனிப் பல்கலைக்கழகம் ஒன்று முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா முதல் முறை முதலமைச்சராக இருந்த போது தான் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன. இது மட்டுமன்றி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ஊக்கத் தொகை, மாவட்டம் தோறும் விளையாட்டரங்கங்கள் அமைத்தல், கிராம விளையாட்டுக்களை ஊக்குவித்தல், உடற்பயிற்சி மையங்கள் அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், குறிப்பாக கிராம மக்களிடையே, மிகவும் பிரபலமான விளையாட்டு கபாடியாகும். இந்த விளையாட்டுக்கான உலக அளவிலான போட்டிகள் சென்னை மாநகரில் வரும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4வது வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், நேபாளம், <ரான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா, சைனீஸ் தைபே, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 20 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி அணிகள் கலந்து கொள்ளும். சென்னையில் நடக்கும் இப்போட்டிகளை நடத்துவதற்கு அரசு மானியமாக 1 கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிக அளவில் உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டரங்கங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் வருகிற 2014_ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசியாவிலேயே முதன் முறையாக 8_வது உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் வாகையர் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, கிரேட் பிரிட்டன், ஹாங்காங், சீனா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, அயர்லாந்து, எகிப்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா, நைஜிரியா, ஸ்பெயின் மற்றும் நியுசிலாந்து ஆகிய 19 நாடுகளை சார்ந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். உலக அளவிலான இந்த போட்டிகளை சென்னையில் நடத்திட முதலமைச்சர் ஜெயலலிதா 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும், வீராங்கனையும் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு மிகவும் அடிப்படை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் ஆகும்.
தினந்தோறும் செய்யும் உடற்பயிற்சியின் மூலமே இதனைப் பெறமுடியும். எனவே இளைஞர்கள், சிறார்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சென்னை நகரில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மற்றும் மதுரை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய 16 இடங்களில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கங்கள் என 17 இடங்களில் 1,500 முதல் 2,000 சதுர அடி பரப்பளவில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க 1 கோடியே 50 லட்சம் ரூபாய், இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கான உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காக 2 கோடியே 55 லட்சம் ரூபாய் என 4 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.