முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலையான 111 மீனவர்கள் இலங்கையில் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

நாகை, ஜன.19 - இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 111 மீனவர்கள் தங்களது படகுகளையும் விடுவிக்கக்கோரி அங்கு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாகையில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். 

நாகை அக்கரைப்போட்டையிலி+ருந்து கடந்த டிசம்பர் மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 111 மீனவர்களையும், அவர்களது 15 படகுகளையும் இலங்கைக் கடற் படையினர் பிடித்துச் சென்றனர். மீனவர்களை திரிகோணமலை சிறையில் அடைத்தனர். திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 111 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் படகுகள் விடுவிக்கப் படவில்லை.

படகுகளை விடுவிக்கும் வரை தமிழகம் திரும்பமாட்டோம் என்று கூறிய மீனவர்கள் அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதுபற்றிய தகவலறிந்த நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்