முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்களதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

டாக்கா, ஜன. 20 - வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்தி சாமி சிலைகளை உடைத்தனர். வங்காளதேசத்தின் தென் மேற்கு பகுதியில் பிரோஜ்பூர் மாவட்டம் உள்ளது. இங்கு இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். 

மைனாரிட்டி ஆக இருக்கும் அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் அங்குள்ள ஒரு கோவில் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. 

அதை தடுக்க வந்தவர்களை அடித்து உதைத்தனர். மேலும் கோவிலில் இருந்த சரஸ்வதி, காளி உள்ளிட்ட சாமி சிலைகளின் தலைகளை உடைத்து சேதப்படுத்தினர். பல சிலைகளை உடைத்து வீசினர். 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவிலை தாக்கியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்