முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவயானி மனு: பதிலளிக்க அமெரிக்க வக்கீலுக்கு அவகாசம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க்,ஜன.20 - விசா மோசடி வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தேவயானி தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதில் அளிக்க அமெரிக்க அரசு வக்கீலுக்கு 31_ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. 

விசா மோசடி வழக்கில் தேவயானி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியா_அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவயானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தேவயானி  மீண்டும் அமெரிக்கா வந்தால் கைது செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்தது.  இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நியூயார்க கோர்ட்டில் தேவயானியின்   வக்கீல் டேனியல் மனு தாக்கல் செய்தார். 

 இந்த மனு குறிதது பதில் அளிக்க அமெரிக்க வக்கீல் பிரீக் பாராராவுக்கு கோர்ட் இம்மாதம் 28_ம்தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. இதை நீடிக்குமாறு அவர் கேட்டதால் 31_ம்தேதி வரை 3 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.                

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்