முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி குற்றம் செய்யவில்லையாம்! கருணாநிதியின் புலம்பல் அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 23 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தனது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் கனிமொழி குற்றம் ஏதும் செய்யவில்லை என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்கு போக விரும்பவில்லை. இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகார செல்வாக்கை பெருக்கி ஏராளமாக பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரச்சாரத்தை தொடர்கிறார்கள்.
அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதை தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்த போது கிடைத்த ரூ. 100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ. 77.5 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாக செலுத்தி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.
கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தை தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நஷ்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.
டெல்லி சி.பி..ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வக்கீல் ராம்ஜெட்மலானி இதை தெளிவாக சுட்டிக்காட்டியும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி உள்ளனர். என் மீதும் என் குடும்பத்தார் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல் நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சி கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாக போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்கு தெரியாமல் இல்லை.
இந்த விவரங்களை தொண்டர்கள் படித்து புரிந்து கொண்டு செயல்படுத்தினால் அறப்போர் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார். இளமையில் இருந்து இதுவரை பல்வேறு பதவிகளில் இருந்த போதும், நாடகம், திரைப்படத் துறையின் மூலம் கிடைத்த வருமானம் அதன் மூலம் வாங்கிய சொத்து அளித்த நன்கொடை என சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பட்டியலை இப்போது இந்த அறிக்கையிலும் அவர் வெளியிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்