முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே ஆபத்தான அண்டை நாடுகள்: ப. சிதம்பரம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 23 - உலகிலேயே இந்தியர்தான் அதிக பிரச்சினைகளில் சிக்கியுள்ள நாடுகளுக்கு மத்தியில் இருக்கிறது என்றும் இதனால் நமக்கு ஆபத்து அதிகரித்திருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். அண்டை நாடுகளால் எல்லையில் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு படையினர் கூடுதல் விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். எனினும் எந்தெந்த அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அண்டை நாடுகளால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து நமது சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டியது எல்லை பாதுகாப்பு படையினரின் கடமையாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு படையினருக்கு பின்னால் மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டிய அமைச்சர், சிறப்பான பயிற்சி, சிறப்பான தொழில்நுட்பம் ஆகியவற்றை அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மத்திய படைகளுக்காக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நிதி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்