முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். ஏலம்: சேவாக் உள்ளிட்ட 16 பேருக்கு சிறப்பு அந்தஸ்து

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 8 - இந்த மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சேவாக், பீட்டர்சன் உள்ளிட்ட 16 வீரர்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். 7 _வது சீசன் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 12 மற்றும் 13 _ம் தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது. 

ஏலத்தில் விற்பதற்காக சர்வதேச வீரர்கள், சர்வதேச போட்டிகளில் ஆடாத உள்ளூர் வீரர்கள் என்று மொத்தம் 895 பேர் கொண்ட பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகம் தயாரித்தது. 

இந்த ஏலப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு 514 பேர் கொண்டதாக தற்போது குறை க்கப்பட்டுள்ளது. இதில் 169 இந்திய வீரர்கள் உள்பட 219 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். மற்ற 295 பேர் முதல் தர போட்டி வீரர்கள். 

இவர்களில் சேவாக், யுவராஜ் சிங், கெவின் பீட்டர்சன், ஜெயவர்த்தனே, ஜான்சன், முரளிவிஜய், டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, காலிஸ், டுபிளீசெஸ், மைக் ஹஸ்சி, திணேஷ் கார்த்திக், ஜாஹிர்கான், மெக்குல்லம், அமித் மிஸ்ரா, டேரன் சமி ஆகிய 16 வீரர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்