முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பு துறையில் ஆன்லைனில் பதிவு ஜெயலலிதா உத்தரவால் மாணவர்கள் - பெற்றோர்கள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 25 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 26 - இந்தியாவிலேயே முதல் முறையாக படித்த பள்ளியிலேயே பிளஸ் 2 மாணவர்கள்  தங்களது  சான்றிதழை பெற்றுக்கொண்டவுடன், படித்த பள்ளியிலேயே ஆன் லைன் மூலம்  15 நாட்களில்  வேலைவாய்ப்பு பதிவினை செய்துகொள்ளலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவால்  தமிழக முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளை யும் தெரிவித்துள்ளனர். சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்
 சந்தோஷ் கே. மிஷ்ரா ஆன் லைன் திட்டத்தினை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டையை வழங்கினார்.
 இதுகுறித்த விபரம் வருமாறு:
மேல்நிலைக்கல்வி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதால், மதிப்பெண் பட்டியல் பெற்ற உடனேயே வேலைவாய்ப்பு அலுவலகங்களை 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்  நாடுகின்றனர். அவ்வாறு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கால விரையம், போக்குவரத்து செலவு ஆகியவை ஏற்பட்டு, மாணவி, மாணவியர் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் பிரச்சனை ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு  வரப்பட்டவுடன், அதனை தீர்க்கும் வகையில் மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ மாணவியர் பயிலுகின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்பு வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த 2011 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்கள் பள்ளியிலிருந்தே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளேன்.
மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளான 25.5.11-லிருந்து 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்காக பதிவுசெய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு 15 நாட்களில் பதிவு செய்யப்படும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் 25.5.11 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இப்பணியை பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் ஆகியன இணைந்து செய்கிறது.
நேற்று 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு முழுவதும் அந்தந்த பள்ளியில் வழங்கப்பட்டது. பள்ளியில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்றவுடன் வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தின் சார்பாக வந்த அதிகாரிகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் சான்றிதழை சரிபார்த்து வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்தனர்.
 சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் சந்தோஷ் கே. மிஷ் ரா ஆன் லைன் திட்டத்தினை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டையை வழங்கினார். அப்போது   சாந்தோம் பள்ளியின் முதல்வர் பிரதர் சூசை ராஜ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் உடனிருந்து மாணவர்களுக்கு வேண்டி வசதிகளை செய்து கொடுத்தனர்
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவினால் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சென்னை சாந்தோம் பள்ளியில் சான்றிதழை பெற்ற பள்ளி மாணவர்கள்  முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறினார்கள். மேலும் மாணவர்களுடன் வந்த பெற்றோர்களும் ஜெயலலிதா நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்