முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால்தாக்கரேயை கொல்ல சதி ஐ.எஸ்.ஐ. திட்டம் அம்பலமானது

வியாழக்கிழமை, 26 மே 2011      இந்தியா
Image Unavailable

சிகாகோ,மே.- 26 - சிவசேனா தலைவர் பால்தாக்ரேயை கொல்ல பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருந்த சதி அம்பலமாகியுள்ளது.  மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஸ்கர்-இ- தொய்பா தீவிரவாதி ஹெட்லி அவரது கூட்டாளியான ராணா ஆகியோர் அமெரிக்காவில்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிகாகோ கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஹெட்லி இந்த வழக்கில் அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
நேற்று சிகாகோ கோர்ட்டில் ராணா மீதான வழக்கு விசாரதணைக்கு வந்தது. ஹெட்லி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது மும்பைத்தாக்குதல் நடத்த லஸ்கர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். ஐ உதவி செய்ததை அம்பலப்படுத்தினார்.மேலும் ஐ.எஸ்.ஐ. அதிகாரியான மேஜர் இக்பால் இதற்கான ஆலோசனைகளை வழங்கினார் என்றும் கூறினார். இதுகுறித்து ஹெட்லி மேலும் கூறியதாவது, மும்பை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு லஷ்கர்இதொய்பா தலைவர் ஹபீப் சயத், மற்றும் மேஜர் இக்பால் ஆகியோரை சந்தித்தேன். அப்போது சயத் குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவை குறித்த வீடியோ காட்சிகளை காட்டினர். மும்பை தாக்குதலுக்கு முன்பு பாபா அணு ஆராய்ச்சி மையம், சிவசேனா கட்சி அலுவலகம் ஆகியவற்றை நோட்டமிட்டேன். சிவசேனா தலைவர் பால் தாக்ரே அமெரிக்கா செல்லும் போது அவரையும் அவரது மகன் உத்தவ் தாக்ரேயையும் கொல்ல உத்தரவிட்டனர். இதற்கான திட்டங்களை சையத் என்னிடம் வழங்கினார். பால்தாக்ரேயை கொல்ல எனது பால்ய நண்பன் ரானாவையும் சேர்த்துக்கொண்டேன் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்