முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 1-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படும்- செல்லூர் ராஜு தகவல்

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 26 - கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் ஆய்வுக்க  கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கலந்துகொணட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் ஆணையின்படி, ஜூன் 1-ம் தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும்  இலவச அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார் இது குறித்த விபரம் வருமாறு: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கா.ராஜு தலைமையில் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம் 24.5.11 அன்று, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா 16.5.11 அன்று பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதார்ரகள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இலவச அரிசி அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஜூன் 1-ம் தேதிமுதல் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டையாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்வித பிரச்சனைகளும் இன்றி வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றி வழங்கிட அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாத்ததின் அனைத்து வேலை நாட்களிலும் நியாயவிலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், அனைத்து நியாயவிலை கடைகளிலும் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா என அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு  மேற்கொள்வதுடன், நியாயவில்லைக் கடைப் பணியாளர்கள் கடையின் பெயர் பலகையில் இருப்பு விவர பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும்வண்ணம் எழுதிவைக்கின்றனரா என கண்காணிக்க வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுபவர்கள் அக்கடனை உரிய நோக்கத்திற்கு பயன்படுத்திட உறுதி செய்திடும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சிறப்பங்காடிகளில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையானது வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் விலையைவிட குறைவாக உள்ளதால் உரிய விளம்பரம் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிக அளவில் விற்பனை செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டுறவு மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கு 12 சதவிகிதம் கமிஷன் தருவதால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் அதிகளவில் கூட்டுறவு மருந்தகங்களை தொடங்கி  நடத்திட அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில்  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் வே.அமுதவல்லி, ந.அநோகன், க.பு.பெ.பன்னீர்செல்வன், க.மா.தமிழரசன், இரா.ராஜேந்திரன், அ.சங்கரலிங்கம், எம்.தர்மலிங்கம, இரா.ஜெயராம், ஆர்.கார்த்திகேயன் எம்.பி.சிவனருள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் தனி அலுவலர்கள், மொத்த  விற்பனை பண்டக சாலைகளின் தனி அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி ஜூன் 1-ம் தேதிமுதல் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுவதையொட்டி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் உயர் அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் வே.அமுதவல்லி, ந.அகோன், க.பு.பெ.பன்னீர்செல்வம், க.மா.தமிழரசன், இரா.ராஜேந்திரன், அ.சங்கரலிங்கம், எம்.தர்மலிங்கம், இரா.ஜெயராம், ஆர்.கார்த்திகேயன் எம்.பி.சிவனருள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள், மொத்த விற்பனை பண்டகசாலைகளின் தனி அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்