முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் முக்கிய நகரங்களில் ராணுவம் ரோந்து

வியாழக்கிழமை, 26 மே 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத், மே.- 26 - குஜராத்தில் நேற்று தொடர்குண்டு வெடிப்பு நடத்தப்படும் என்று மத்திய உளவு துறைக்கு வந்த மர்ம கடிதத்தை தொடர்ந்து அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் ராணுவம் உஷார் நிலையில் ரோந்து வந்தது. குஜராத் மாநிலத்தில் மே 25ம் தேதி(நேற்று) தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்படும் என்ற அனாமதேய கடிதத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் அதிரடிச்சோதனை நடத்தப்பட்டதோடு சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது.
முக்கிய நகரங்களான ஆமதாபாத், வதோரா, சூரத் போன்ற நகரங்களில் ராணுவவீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கமாண்டோ படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கடலோர பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி விடாமல் இருப்பதற்காக அப்பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்