முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஷப் சின்னப்பா தலைமையில் கிறிஸ்தவ சபைகளின் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 26 - சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று பிஷப் சின்னப்பா தலைமையில் கிறிஸ்தவ சபைகளின் பேராயர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர். இது குறித்த விபரம் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பிஷப் கூட்டமைப்பின் தலைவரும், சென்னை-மயிலாப்பூர் ஆர்ச்பிஷப்புமான டாக்டர் எ.எம்.சின்னப்பாவும் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஆயப்பேரவையினரும் சந்தித்தார்கள். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றது தங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிப்பதாகவும், அது இறைவன் அளித்த நன்கொடை என தாங்கள் வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறுபான்மை சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்த்து வைப்பார்கள் என்பதில் தாங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருபப்தாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் வாழ்த்துக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, பேராயர்கள் லாரன்ஸ் பயஸ், பிரகாஷ், ஞானபிரகாஷ், லெஸ்லி, மில்டன், பிராங்க்ளின், வசீகரன் மற்றும் சோல் வின்னர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்