எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெலிங்டன், பிப். 16 - நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடந்து வரும் 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்னைக் குவித்து உள்ளது.
இந்திய அணியின் இன்னிங்சில் ரகானே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு முதலாவது சதமாகும். ஷிகார் தவான் 2 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவவிட்டார்.
இந்தியா _நியூசிலாந்து அணிகள் மோதும் 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. வில்லியம்சன் அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், மொகமது சமி 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன் எடுத்து இருந்தது.
துவக்க வீரர் ஷிகார் தவான் 71 ரன்னும், நைட் வாட்ச்மேனாக இறங்கி ய இஷாந்த் சர்மா 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 2_வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இஷாந்த் சர்மா 26 ரன் எடுத்து இருந்த போது போல்ட் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து விராட் கோக்லி களம் வந்தார். மறுமுனையில் இருந்த தவான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிருஷ்டவசமாக 98 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
127 பந்துகளில் 14 பவுண்டரி , ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். முதல் டெஸ்டில் தவான் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து இருந்தது.
அப்போது விராட் கோக்லி 27 ரன்னையும், ரகானே 22 ரன்னையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
பொறுப்புடன் விளையாடி வந்த கோக்லி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அவுட் ஆனார். அவர் 38 ரன்கள் எடுத்தார்.
7_வது விக்கெட்டுக்கு ரகானே, கேப்டன் தோனி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ரகானே 93 பந்தில் 50 ரன்னை (7 பவுண்டரி) தொட்டார்.
81_வது ஓவரில் நியூசிலாந்து புதிய பந்தை எடுத்தது. 82.3 _ வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னைத் தொட்டது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு தோனி 50 ரன்னை எடுத்தார்.
இந்த ஜோடியை போல்ட் பிரித்தார். தோனி 68 ரன் எடுத்திருந்த போது, பெவிலியன் திரும்பினார். 86 பந்தில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
அப்போது, ஸ்கோர் 348 ஆக இருந்தது. 7 _வது விக்கெட் ஜோடி 120 ரன் எடுத்தது சிறப்பானதாகும். பின்பு 8 _வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேசா ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார்.
அவர் தன் பங்குக்கு 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஜாஹீர்கான் இறங்கினார். 98.4 ஓவரில் இந்திய அணி 400 ரன்னை குவித்தது.
மறுமுனையில் இருந்த ரகானே தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து அவர் 103 ரன்னை எடுத்தார்.
149 பந்துகளில் 15 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார். 5_வது டெஸ்டில் விளையாடும் ரகானேவுக்கு இது முதல் சதம் ஆகும்.
ரகானே 118 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். 158 பந்துகளில் 17 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். இந்திய அணி 102.4 ஓவரில் 438 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது நியூசிலாந்து ஸ்கோரை விட 246 ரன் கூடுதலாகும்.
ஜாஹீர்கான் கடைசியாக 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். போல்ட், சௌதி, வாக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
246 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2_வது இன்னிங்சைஆடியது. ஆட்டத்தின் 2_வது ஓவரில் தொடக்க ஜோடியை ஜாஹீர்கான் பிரித்தார்.
புல்டான் 1 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யு. ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்து இருந்தது.
இந்தப் போட்டி இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
நியூசிலாந்து அணியின் எஞ்சிய 9 விக்கெட்டுகளை 221 ரன்னுக்குள் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். இன்று இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தினால் இனன்னிங்ஸ் வெற்றியை பெற முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.