முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈவ் டீசிங்கை கண்டித்த தலித் இளைஞர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      இந்தியா
Image Unavailable

முசாபர்நகர், மே.27 - தனது சகோதரியை ஈவ் டீசிங் செய்தவர்களை கண்டித்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கட்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மொகித். இவரது சகோதிரியை சில இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்தனர். இதை மொகித் கண்டித்தார். அப்போது அவருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தனது சகோதிரியை பற்றி அவதூறாக பேசியதால் மொகித் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதில் அந்த இளைஞர்களில் ஒருவர் மொகித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்து மொகித் அதே இடத்தில் சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட கல்லு சிங் என்ற இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 இளைஞரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியான மொகித் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்