முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை: மே.இ.தீவு வீரர் பொல்லார்டு விலகல்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

டிரினிடாட், பிப். 21- வங்கதேசத்தில் நடக்க இருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து மே.இ.தீவு அணியின் அதிரடிவீரரான பொல்லார்டு விலகியுள்ளார். 

மே.இ.தீவு அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அவர் உள்ளூரில் நலநிதி திரட்டுவதற்கான கால்பந்து போட்டி ஒன்றில்  சமீபத்தில் பங்கேற்றார். 

இந்தப் போட்டியின் போது, பொல்லார்டு க்கு கால்மூட்டில் காயம் ஏற்பட்டது. அதிலி ருந்து முழுவதும் குணமாகாததால் அவர் அணியில் இடம் பெறவில்லை. 

டி _ 20 உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6_ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கா க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

உலகக் கோப்பையை கைப்பற்ற ஒவ்வொடு அணிகளும் தீவிரப் பயிற்சியில் இறங்கி உள்ளன. இதற்கான 15 பேர் கொண்ட மே.இ.தீவு அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்