முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி நிறுத்தம் - பதிலளிக்க அரசுக்கு ஜகோர்ட் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 26 - தமிழகத்தில் சமச்சீர் கல்வியை  ஓர் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டதிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஜகோர்ட் வரும் 8 ம்தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:

சென்னையைச் சேர்ந்த வக்கீல் சியாம் சுந்தர் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமுல்படுத்த கேட்டு ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:​ தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை கொண்டு வருவது குறித்து முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்தி அரசுக்கு 2007​ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த அரசு சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதாக அறிவித்தது. 2010​ல் இதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டத்தை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை உறுதி செய்தது. 2010​2011​ம் கல்வியாண்டில் 1​ம் வகுப்பு, 6​ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமுல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் 10​ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்'டது. அதற்காக பாடப்புத்த கங்கள் அச்சிடப்பட்டுள் ளன. இந்த நிலையில் தமிழகத் தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. பழைய கல்வி முறையே தொடர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கென புதிய நிபுணர் குழுவை அரசு அமைக்க இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழைய கல்வி முறையே தொடரும் என அறிவித்து அதற்கான பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற் காக பள்ளிகளை திறப்பதை அரசு தள்ளி வைத்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு நேற்று நீnullதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கே. பாலு ஆஜராகி வாதிட்டார். 

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவnullத கிருஷ்ணன் ஆஜராகி, சட்டப்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவு இது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்த கல்வியைத்தான் படிக்க வேண்டும் என்று கூற முடியாது என்றார். சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி, தமிழக அரசு எடுத்த முடிவு சட்டத்தை மீறிய செயல் ஆகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக செயல்படும் விதமாக அரசு முடிவு எடுத்துள்ளது என்றார். தமிழக அரசுக்கு ஆதரவாக வக்கீல் கிருஷ்ண மூர்த்தி ஆஜராகி சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதற்காகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழு அமைக் கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அரசின் முடிவுக்கு ஆதரவாக வாதங்களை முன் வைக்க என்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதற்கு அனுமதி அளித்த நீnullதிபதிகள் கூறியதாவது:​ சமச்சீர் கல்விக்காக முந்தைய அரசு அதிக அளவில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மக்களின் வரிப்பணம். நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படை யில்தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எளிதாக உதாசீனப்படுத்த முடியாது. அரசு ஜூன் 8​ந்தேதிக்குள் விரிவான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணையும் ஜூன் 8​ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு nullநீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்