முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது சுயசரிதையை எழுதுகிறேன்: சச்சின் தகவல்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 28 - எனது சுயசரிதையை எழுத தொடங்கிவிட்டேன் என்று நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். 

கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்குப் பிறகு 2_வது முறையாக நேற்று முன் தினம் சென்னை வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

ரெனால்ட்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற டெண்டுல்கர் கூறியதாவது _ நான் எனது சுயசரிதை எழுதும் பணியை தொடங்கி விட்டேன்.   

அதில் உள்ள விபரங்களை இப்போது தெரிவிக்க இயலாது. அப்படி தெரிந்தால் யார் தான் எனது சுயசரிதை புத்தகத்தை படிப்பீர்கள். 

நேரம் வரும் போது அதில் இடம் பெற்றுள்ள தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள அறிவு பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் டெண்டுல்கர் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் போது, விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரி மாணவ _ மாணவிகளை பாராட்டினார். 

டைஸ் _2016 க்கான பேனரை அவர் வெளியிட்டார். விழாவில் டெண்டுல்கர் பேசுகையில், மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறினார். 

வேலம்மாள் கல்வி குழும தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், டெண்டுல்கருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். 

21 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய டெண்டுல்கர் சதத்தில் சதம் கண்டு சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை வீரரான டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 51 சதமும், ஒரு நாள் போட்டியில் 49 சதமும் அடித்திருப்பது நினைவு கூறத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்