முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள்: மே.இ.தீவு இங்கிலாந்தை வீழ்த்தியது

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆன்டிகுவா, மார்ச். 2 - இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் மே.இ.தீவு அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், கேப்டன் பிராவோ, சிம்மன்ஸ் மற்றும் சேமி ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

மே.இ.தீவு மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள்  கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. 

இதன் முதல் போட்டி ஆன்டிகுவா நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மே.இ.தீவு அணி நிர்ணயிக்கப்  பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்னை எடுத்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில் கேப்டன் பிராவோ அதிகபட்சமாக 87 ரன்னும், சிம்மன்ஸ் 65 ரன்னும், டேரன் சேமி 61 ரன்னும் எடுத்தனர். 

ஒரு கட்டத்தில் மே.இ.தீவு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன் என்ற மோசமான நிலையில் தடுமாறிக் கொண்டு இருந்தது. 

பின்பு 5_வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ் _ பிராவோ (108 ரன்), 6_வது விக்கெட்டிற்கு பிராவோ _ டேரன் சேமி (116 ரன்னும்) சிறப்பாக விளையாடியது. பிரஸ்னன் 3 விக்கெட் கைப்பற்றினார். 

இங்கிலாந்து அணி 270 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவு  அணி வைத்தது. 

ஆனால் அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்னை எடுத்தது. இதனால் அந்த அணி 15 ரன்னில் தோற்றது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான மைக்கேல் லம்ப் சதம் அடித்தும் பலன் இல்லை. அவர் 106 ரன்னும், மொயின் அலி 44 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் கைப்பற்றினார். 

இந்த வெற்றி மூலம் 3  போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மே.இ.தீவு அணி 1_0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2_வது ஆட்டம் இன்று நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்