முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபியாவில் 5 இந்தியர்கள் உயிருடன் புதைப்பு

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், மார்ச்2 - சவூதி அரேபியாவில் சித்திரவதை செய்து 5  இந்தியர்கள் உயிருடன் புதைக்கப் பட் டனர். சவூதி அரேபியாவில் கிழக்கு மாகாணத்தி குவாடிப் பகுதியில் சாப்வா என்ற இடத்தில் விவசாயப் பண்ணை உள்ளது. அங்கு சிலர் உயிருடன் புதைக்கப் பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை போலீஸார் தோண்டினார்கள். அப்போது அங்கு அழுகிய நிலையில் 5 ஆண்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவர்களின் கை, கால்கள் கட்டப்பட்டி ருந்தன. வாயில் துணி திணிக்கப் பட்டிருந்தது. இது தொடர்பாக 25 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்கதவர்கள் 5 பேரும் இந்தியாவைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. 

இந்த பண்ணை ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது. அதை அலி ஹபீப் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அங்கு பணிமிபுரிந்த 5 விவசாயத் தொழிலாளர்களை சித்ரவதை செய்து உயிருடன் புதைத்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

                           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்