முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிடம் தோற்றது அவமானம்: வங்காளதேச கேப்டன்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 3 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றது எங்களுக்கு மிகவும் அவமானமாகும் என்று வங்கதேச கேப்டன் முஷ்பிகர் ரகீம் தெரிவித்து உள்ளார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை 32 ரன்னில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. 

டெஸ்ட் அங்கீகாரம் பெற் ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். 

இந்த வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது கூறியதாவது_ ஐ.சி.சி.யின் குழு உறுப்பினராக உள்ள அணிகளில் ஒன்றை முதன் முறையாக வீழ்த்தி இருக்கிறோம். 

ரசிகர்களும், நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். 

எங்கள் ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். எங்களை நேசிக்கும் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். 

25 ஓவர் வரை வங்காளதேசம் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அப்போது அஸ்கர் _ சமியுல்லா ஜோடி சிறப்பாக விளையாடியது. 

கடைசி 10 ஓவரில் 107 ரன்கள் குவித்தது முக்கியமானதாகும். இதே போல பந்து வீச்சு, பீல்டிங்கும் நன்றாக இருந்தது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார். 

தோல்வி குறித்து வங்காளதேச கேப்டன் முஷ்பிகர் ரகீம் கூறியதாவது _ ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றது மிகவும் அவமானமாகும். 

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் நாங்கள் செயல் இழந்து விட்டோம். எங்களது பந்து வீச்சு முதல் 30 ஓவர் வரை சிறப்பாக இருந்தது. 

அதன் பிறகு தான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 254 ரன் இலக்கு என்பது எடுக்கக் கூடிய இலக்கு தான். 

கடைசி வரை வெற்றிக்காக நாங்கள் போராடினோம். சீனியர் வீரர்களான ஷகீப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாதது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இனிவரும் ஆட்டங்களில் முன்னேற்றம் அடைய விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்