எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மார்ச்.3 - இந்தியாவில் நீதித்துறை உள்பட அரசின் எல்லா நிலைகளிலுமே ஊழல் புரையோடி விட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
2013ம் ஆண்டின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந் திர அறிக்கை இந்த தகவலை தெரிவிக் கிறது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டார்.
அதிகார நிலைகளில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்த குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வழி இருந்தாலும் அந்த சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முன் வருவதில்லை. தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் தப்பிக்கின்றனர்.
ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 583 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. 2012ல் மத்திய கண்காணிப்பு ஆணையம் 7224 புகார்களை பெற்றது. இதில் 5720 வழக்குகளில் நடவடிக்கை எடுக்க அது பரிந்துரைத்தது. அரசுத் துறைகளிலிருந்து சேவைகள் பெறுவ தற்காகவே லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலை மக்களுக்கு உள்ளதாக தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக இலவச தொலைபேசி இணைப்பு வசதியை மத்திய கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
சமூக நல அமைப்புகள் ஊழல் பற்றி மக்களின் கவனத்தை ஈர்க்க ஆர்ப் பாட்டங்கள் நடத்தியுள்ளன. தனிப்பட்ட நபர்களின் ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகள், காப்பீட்டுத்துறை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார்துறைகளில் ஊழல் பற்றிய புகார்களை விசாரித்து பொதுமக்களின் குறைதீர்க்க தலைமை கண்காணிப்பு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை பற்றி விசாரிக்க லோக்பால் விசாரணை அமைப்பை உருவாக்க கடந்த டிசம் பரில் நாடாளுமன்றம் மசோதா நிறை வேற்றியது.
வறுமை ஒழிப்புக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை அமல்செய்வதில் உள்ள குறைபாடுகளும் ஊழல்களும் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற உதவுவதில்லை.
ஊழலை எதிர்த்து புகார் கொடுப்பது, வழக்கு தொடுப்பது உள்ளிட்ட சமூக சேவை பணிகளில் ஈடுபட்ட ராஜ் மோகன் சந்திரா என்பவரின் கொலை தொடர்பாக திருவண்ணாமலை நகராட்சி உறுப்பினர் வெங்கடேசன் என்பவர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பான அறிக்கை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தாக் கல் செய்யப்பட்ட போதிலும் அதை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி சம்பந்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் விசாரணை முடியவில்லை.
ஜம்மு காஷ்மீர், வட கிழக்கில் பயங் கரவாதிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஜம்மு காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நக்ஸல், தீவிரவாதிகள் பிரச்சினை காரணமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டுச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இனவாத குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு ஏராளமானோர் வீடிழந்து வேறு இடங் களுக்கு புகலிடம்தேடிச் சென்றுள்ளனர்
இந்தியாவில் போலீஸும் பாது காப்புப் படையினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பாக சில அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது நல்ல முன் னேற்றம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.