முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஓடுகள் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச்.3 - இலங்கையில் கொன்று புதைக்கப்பட்ட 9 பேரின் மண்டை ஓடுகள் மீட்கப்பட்டன.  இலஙகையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதி உள்ளது. இது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த்து. இங்குள்ள தோட்டத்தை தொழிலாளகள் சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது ஒரு மண்டை ஓடு வெளியே தேரிந்தது. எனவே, அந்த இடத்தைத் தோண்டி பார்த்தனர். அங்கு 9 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அவர்கள் அணைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்களாம் என கருதப்படுகிறது. மேலும், விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது குறித்து இலங்கை ராணுவம் செய்தி தொடரபாளரிடம் கூறியதாவது:

இப்பகுதி ஏற்கனவே விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டுல் இருந்தது. எனவே, இக்கொலையை ராணுவம் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் தான் செய்து மறைத்துள்ளனர். தங்களின் உத்தரவுக்கு கீழ்ப்படியாதவர்கள் மீது இது பொன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்றார்.

மன்னார் மாவட்டத்தில் கட்டிட பணிகள் நடந்த போது அங்கு புதைக்கப்பட்ட 80 பேரின் எழும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்