எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 28 - தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு மட்டுமன்றி இதுவரை இல்லாத வகையில் 5 மாணவிகள் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளிகள் மூலமும், தனியாகவும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 823 மாணவ மாணவிகள் எழுதினார்கள். பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் பரீட்சை எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 9 ஆயிரத்து 555 பேர் ஆவார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 82.50 ஆகும்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாக இருந்தது. 3 லட்சத்து 77 ஆயிரத்து 815 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 88.10 ஆகும். கடந்த ஆண்டு 85.50 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 82.30 சதவீதம் ஆகும். 3 லட்சத்து 36 ஆயிரத்து 971 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 79.40 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர்.
4 லட்சத்து 77 ஆயிரத்து 429 பேர் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு கணிதத்தில் 12,532 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டில் 2,399 பேர் மட்டுமே கணிதத்தில் சென்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் அறிவியல் பாடத்திலும் இம்முறை 3,677 (கடந்த முறை 1,310 பேர்), மாணவ, மாணவியரும், சமூக அறிவியல் பாடத்தில் 756 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தில் முதல் ரேங்காக 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 5 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அதே போல் 2வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 மாணவ மாணவிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். 500க்கு 494 மதிப்பெண்களை 24 பேர் எடுத்து 3வது இடத்தை பிடிக்கின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
முதலிடம்
1.எம்.நித்யா(496)-எஸ்.எச்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
2.எஸ்.ரம்யா(496)-ஸ்ரீகுருகுலம் பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
3.எஸ்.சங்கீதா(496)-முத்தமிழ் பள்ளி, பெரியேரி, சேலம்.
4.எம்.மின்னலாதேவி(496)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5.ஆர்.ஹரினி(496)-அவர் லேடி பள்ளி, திருவொற்றியூர், பொன்னேரி.
2வது இடம்
1.ஏ.சதாம் உசேன்(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி.
2.வி.பாக்யஸ்ரீ(495)-ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்குடி.
3.பி.அருண்ராஜா(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி.
4.ஜெ.ஜெயப்பிரியா(495)-எஸ்.எச்.என்.ஈத்தேன் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
5.டி.ஹரிபாரதி(495)-நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
6.எம்.பொன்மணி(495)-எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.என்.எம்.கார்த்திக்(495)-செயின்ட்மேரீஸ் பள்ளி, மதுரை.
8.ஏ.சுபலட்சுமி(495)-விவேகானந்தா பள்ளி, செல்லபெருமாள்பேட், புதுச்சேரி.
9.வி.ஸ்ரீனிரதி(495)-அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, பொன்னேரி.
10.எம்.புவனா(495)-விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, பொன்னேரி.
11.ஆர்.சுஷ்மிதா(495)-பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.
3வது இடம்
1.டி.எல்.நிம்ருதா(494)-செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்.
2.கே.லட்சுமிபிரியா(494)-எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி,நாகர்கோவில்.
3.ஜெ.உமா(494)-எஸ்.எச்.என்.ஈத்தேல் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
4.லலித் செல்லப்பா கார்பென்டர்(494)-பி.ஏ.சி.எம்.பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
5.குங்குமாகல்யா(494)-எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
6.பி.எம்.இந்து(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கவிந்தபாடி, கோபிசெட்டிபாளையம்.
7.எஸ்.ஹரிபிரபா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
8.ஏ.ஷோபனா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்.
9.எஸ்.அசோக்குமார்(494)-எஸ்.வி.வித்யாலயா, தசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10.என்.லோகேஷ்குமார்(494)-ஜி.வி.மேல்நிலைப்பள்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.
11.விக்னேஷ்வரி(494)-வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12.கே.காவியா(494)-அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.
13.எம்.செந்தில்குமார்(494)-சேரன் மேல்நிலைப்பள்ளி, புண்ணம்சத்திரம், கரூர்.
14.எஸ்.ஜெயப்பிரகாஷ்(494)-ஈ.ஆர்.மேல்நிலைபள்ளி, திருச்சி.
15.எம்.ஜோதீஸ்வரன்(494)-ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
16.எஸ்.காயத்ரி(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை.
17.ஏ.பவித்ராதேவி(494)-ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
18.சி.அபினயா(494)-கலைமகள் மேல்நிலைப்பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19.ஜே.ஷைனி(494)-மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, தியாகதுருகம், விழுப்புரம்.
20.எம்.ஷபனா பேகம்(494)-செயின்ட் தெரசாஸ் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம்.
21.ஈ.தனசேகர்(494)-டி.ஆர்.பி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
22.எச்.சங்கீதா(494)-செயின்ட் அந்தோனிஸ் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை.
23.ஜெ.தாமோதரன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
24.எஸ்.ஐயப்பன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.