முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவர்க்கார் உருவ படத்திற்கு சபாநாயகர் மீராகுமார் அஞ்சலி

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. மே.- 29 - சுதந்திர போராட்ட தியாகி வீர சவர்க்கார் உருவ படத்திற்கு  சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று  மலர் அஞ்சலி செலுத்தினர். சுந்திர போராட்ட தியாகி வினாயக்  தாமோதர் சவர்க்கார் ( வீர சவர்க்கார் ) பிறந்த நாளை முன்னிட்டு பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்ப்டுடல்ள அவரது உருவ படத்திற்கு சபாநாயகர் மீரா குமார்.,  பாராளுமன்ற பா.ஜ.க.தலைவர் எல்.கே. அத்வானி  லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்  ஆகியோர் மலர் அஞ்சலி  செலுத்தி மரியாதை  செய்தனர்.
ஏராளமான இன்னாள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், லோக் சபை செக்ரட்டரி ஜெனரல் ராஜ்ய சபை செக்ரட்டரி ஜெனரல், உள்ளிட்ட பலரும் சவர்க்கார் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
வீர சவர்க்கார் வாழ்க்கை குறிப்பு அடங்கிய  இந்தி மற்றும் ஆங்கில  மொழிகளில் கையேட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கடந்த 2003  ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி சவர்க்கார் உருவ படத்தை  அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்