முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ.க்களை இழுப்பதில் நாங்கள் ஈடுபட்டது உண்மைதான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,மே.- 29 - கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாளம் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உண்மைதான் என்று பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா அரசு ஆட்சியில் இருக்கிறது. முதல்வர் எடியூரப்பா பதவிக்கு எதிர்க்கட்சிகளாலும் உள்கட்சியிலும் அடிக்கடி ஆபத்து வந்துகொண்டியிருக்கிறது. மேலும் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் அறிக்கை அனுப்பி உள்ளார். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடியூரப்பா பல வகைகளிலும் முயற்சி செய்து வருகிறார். ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா முயற்சி செய்து வருவதாக அந்த கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுகுறித்து எடியூரப்பா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை செயல்படுத்தி வருவது உண்மைதான் என்றார். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து எனது ஆட்சியை கவிழ்க்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளம் அரசும் முயற்சி செய்து வருகிறது. அதனால்தான் நாங்களும் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர்களை ராஜினாமா செய்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தி பாரதிய ஜனதா வெற்றிபெறச் செய்வதே ஆபரேஷன் லோட்டஸ் திட்டமாகும். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பல சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பையொட்டி தங்களுடைய பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ள 12 எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்