முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக பா.ஜ.க.தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு ஜாமீன்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர். மே.- 29 - கர்நாடகத்தில்  பா.ஜ.க.பந்த் நடத்திய போது ஏற்பட்ட இழப்புக்கு காரணமான அம்மாநில பா.ஜ.க.தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக தொடரப்ப்டட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளூர் நீதிமன்றம் ஒன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது பல ஊழல் புகார்கள் கூறப்ப்டடன. இந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னர் எச்.ஆர்.பரத்வாஜ்ஜிடம் எதிர்க்கட்சியினர் அனுமதி கேட்டனர். இதற்கு கவர்னமும் அனுமதி கொடுத்தார். கவர்னரின்  இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 22  ம் தேதி கர்நாடகத்தில்  பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏகப்பட்ட சொத்துக்கள் நாசம்  செய்யப்பட்டன. இந்த நாசத்திற்கு  கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பாவே பொறுப்பு என்று கூறி அவருக்கு எதிராக  ஒரு வக்கீல் புகார் மனு  தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் ஈஸ்வரப்பாவை கோர்ட்டில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டி ருந்தது. ஆனால் ஈஸ்வரப்பா  ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து ஈஸ்வரப்பாவுக்கு ஜாமீனில் வெலியே வர முடியாத கைது வாரண்டை கோர்ட்டு பிறப்பித்தது.
இதை எதிர்த்து  ஏழாவது  கூடுதல்  தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு  கோர்ட்டில்  ஈஸ்வரப்பா அப்பீல் மனு தாக்கல்  செய்து தனக்கு ஜாமீன் வழங்கும்படி  கேட்டுக்கொண்டார். இநத மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு  ஜெய்சங்கரா,  ஈஸ்வரப்பாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்