முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில தேர்தல் ஆணையாளராக சோ.அய்யர் நியமனம் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 29 - மாநில தேர்தல் ஆணையாளராக சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக கவர்னர் பர்னாலா வெளியிட்டுள்ள  உத்தரவு செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக முதலில் நியமிக்கப்பட்ட சையத் முனீர் ஹோடா ராஜினமா செய்தார்.  இதன் விளைவாக முனைவர் சோ.அய்யரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக அரசு நியமித்து ஆணையிடுகிறது என்று அரசு குறிப்பு தெரிவிக்கிறது.
இவ்வாணையுடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையானது 27.5.11 நாளிட்ட தமிழ்நாடு அரசின் சிறப்பிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் 243-கே எனும் உறுப்பின்படியும், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 239-ம் பிரிவுடன் இணைத்து படிக்க தக்கவாறு முனைவர் சோ.அய்யரை 2011-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி அன்றும் அது முதற்கொண்டும் நடைமுறைக்கு வருமாறு இரண்டு ஆண்டுக்கால அளவிற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் என்றும் அந்த அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்