முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா மீது ஹசாரே தாக்கு

திங்கட்கிழமை, 30 மே 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,மே.- 30 - ரிமோட் கண்ட்ரோல் போல செயல்பட்டு வரும் சோனியா காந்திதான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார் என்று காந்தியவாதியான அண்ணா ஹசாரே குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு சார்பில் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால் ரிமோட் கண்ட்ரோல் போல் இருந்து கொண்டு அவரை இயக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் கெட்ட மனிதர் அல்ல. ஆனால் பிரச்சினைகள் உருவாவதற்கு ரிமோட் கண்ட்ரோல் தான் காரணம்.
எந்த அரசாக இருந்தாலும் மக்கள் சக்திதான் பலம் வாய்ந்தது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஆகஸ்ட் 16 ம் தேதிக்குள் லோக்பால் சட்ட மசோதா நிறைவேற்றப்படா விட்டால் புது டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். இதற்காக கர்நாடக மக்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஊழலுக்கு எதிராக நான் பிரச்சாரம் செய்து வருவதால் இதுவரை 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள். ஆனால் கறைபடியாதவன் என்பதால் என்னை அவர்களால் நெருங்க முடியவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்