முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லா சாதனையையும் கோக்லி முறியடிப்பார்: அப்பாஸ்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பதுலுல்லா, மார்ச். 18 - சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் விராட் கோக்லி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாஹிர் அப்பாஸ் தெரிவித்து இருக்கிறார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல பேட்ஸ்மேன் ஜாஹிர் அப்பாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது_ 

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க கூடிய ஒரே பேட்ஸ்மேனானக விராட் கோக்லி உள்ளார். 

இந்திய பேட்டிங் வரிசையில் முன்னணி வீரராக திகழும் அவரதுஆட்டம் மிகவம் சிறப்புடன் காணப்படுகிறது. அவரால் எல்லா சாதனைகளையும் முறியடிக்க முடியும். 

பாகிஸ்தானிலும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் அவர்களை உருவாக்கி செயப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இளம் வீரரான அகமது ஷெசாத் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் ஆவார். இனி வரும் கால கட்டங்களில் சிறந்த வீரரான அவர் முதிர்ச்சி அடைவார். 

20 ஓவர் உலகக் கோப்பைக்கு தோனி திரும்பி இருப்பதால் இந்திய அணி பலம் பெற்று உள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது. 

ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி இருந்ததால் பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

67 வயதான ஜாஹிர் அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி உள்ளார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணிக்கு அவர் பேட்டிங் ஆலோசகராக உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்