முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் கடலில் அலைகடலென மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள்

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், மே.- 30 - ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் 10ஆயிரம் பேர் இன்று அலைகடலென மீன் பிடிக்க செல்கின்றனர். தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்கம் காரணமாக கடந்த மாதம் 16ம் தேதி முதல் நேற்று வரை மீன்பிடிக்க தடை அமுலில் இருந்தது. இந்த தடை காலம் நேற்று முடிவடைந்ததால் இன்று முதல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 10ஆயிரம் மீனவர்கள் 1500 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்செல்கிறார்கள். இன்று காலை 6 மணிக்கு மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, மீன்பிடி தடைகாலம் நேற்றுடன்(29.05.2011) முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் விசைப்படகுகளை சரிசெய்யும் பணி நடந்தது. 45 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்கள்.
மீன்பிடி தடைகாலம் அமுலில் இருந்ததால் மீன் விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து காணப்பட்டது. இன்று முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்வதால் மீன்விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago