முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு தோனி பாராட்டு

சனிக்கிழமை, 22 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 23 - 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 10 சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக வீரர்களுக்கு கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார். 

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினத்துடன் தகுதிச் சுற்று ஆட்டம் முடிந்து சூப்பர் 10 சுற்றும் தொடங்கியது. 

குரூப் 1 பிரிவிற்கான இந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னே எடுத்தது. உமர் அக்மல் அதிகபட்சமாக 33 ரன் எடுத்தார். 

அமித் மிஸ்ரா 22 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர்குமார், மொகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். 

பின்னர் விளையாடிய இந்திய அணி 9 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இந்திய அணி தரப்பில், ரெய்னா 28 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) விராட் கோக்லி 32 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 28பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். 

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியதாவது _ சுழற் பந்து வீரர் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. 

70 முதல் 75 சதவீதம் வரை அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இனி வரும் போட்டிகளிலும் அவரால் இதை விட இன்னும் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நம்புகிறேன். 

நாங்கள் சில கேட்சுகளை தவறவிட்டோம். நாங்கள் சிறப்பாக விளையாடியதால் தான் பாதிப்பு ஏற்படவில்லை. 

தவான் _ ரோகித்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பின்னர் வந்த கோக்லியும் ,ரெய்னாவும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். 

மிடில் ஆர்டரில் ரெய்னா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்வாறு தோனி கூறியுள்ளார். 

தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் மொகமது ஹபீஸ் கூறியதாவது _ ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. 

இந்த ஆடுகளத்தில் 150 ரன் எடுத்து இருக்க வேண்டும். நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். 

இந்திய சுழற் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக மிஸ்ரா அபாரமாக வீசினார். இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு நாங்கள் முழுமையாகவே தயாராக இருந்தோம். 

மன வலிமையின்மையால் நாங்கள் தோற்கவில்லை. உலகக் கோப்பையில் இந்திய அணி யிடம் நாங்கள் தோற்பது தொடர் கதையாக இருக்கிறது. 

அடுத்த முறையாவது இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சிப்போம். இவ்வாறு ஹபீஸ் கூறியுள்ளார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற அமித் மிஸ்ரா கூறும் போது, பாகிஸ்தானை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. 

கேப்டன் தோனியின் ஆதரவு எனக்கு அதிகமாக இருந்தது. அவரது ஆலோசனை பலனை கொடுத்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்