முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐடிஎப் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் பாலாஜி - லோபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மார்ச் 24 - திருச்சியில் நடைபெற்று வரும் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜியும் ஸ்பெயினின் என்ரிக் லோபஸும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. 

 ஒற்றையர் அரையிறுதியில் ஸ்பெயினின் என்ரிக் லோபஸ் 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை என்ரிக் லோபஸ் கைப்பற்ற, அடுத்த செட்டை 7-5 என்ற கணக்கில் ராம்குமார் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். எனினும் 3-வது செட் லோபஸ் வசமாகவே, ராம்குமார் தோல்வி கண்டார். 

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஜீவன் நெடுஞ்செழியனைத் தோற்கடித்தார். 

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் பிரகாஷ்-ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-3, 4-6, 10-6 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் ஜியார்ஜியோ போர்ட்டலுரி-ஸ்வீடனின் லூகாஸ் ரெனார்ட் ஜோடியை தோற்கடித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்