எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியாமி, மார்ச் 24 - அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட தகுதிபெற்ற செரீனா, அந்த சுற்றில் சர்வதேச தரவரிசையில் 51-வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஸ்வேடோவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் யாரும் எதிர்பாராத வகையில் செரீனாவுக்கு இணையாக ஆடினார் யாரோஸ்லாவா. ஒரு கட்டத்தில் செரீனா 3-1 என்ற கணக்கில் இருந்தார். அதன்பிறகு அபாரமாக ஆடிய யாரோஸ்லாவா, செரீனாவின் சர்வீஸை முறியடித்து 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
இதனால் பின்னடைவை சந்தித்த செரீனா, கடும் போராட்டத்துக்குப் பிறகு யாரோஸ்லாவாவின் சர்வீஸை தகர்த்து சரிவிலிருந்து மீண்டார். இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் 5-5 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். அடுத்த இரு கேம்களில் இருவரும் தங்களின் சர்வீஸை தக்கவைக்க, முதல் செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதிலும் யாரோஸ்லாவா கடும் சவால் அளித்தார். எனினும் விடாப்பிடியாக போராடிய செரீனா, டைபிரேக்கரை 9-7 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் முதல் செட்டை 7-6 (7) என்ற கணக்கில் தன்வசமாக்கினார்.
பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் யாரோஸ்லாவா பதற்றமடைந்ததை சரியாகப் பயன்படுத்திய செரீனா அதை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
செரீனா தனது 3-வது சுற்றில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவை சந்திக்கிறார். கார்ஸியா தனது 2-வது சுற்றில் 7-6 (34), 7-6 (3) என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் கிளாரா ஸக்கோபலோவாவைத் தோற்கடித்தார்.
போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா தனது 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் குருமி நாராவை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-3, 1-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் சீனாவின் பெங் ஷுவாயை வீழ்த்தினார்.
2011 விம்பிள்டன் சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் பாவ்லா ஆர்மேச்சியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செர்பியாவின் அனா இவானோவிச் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன் டேவிஸையும், ஜெர்மனியின் சபைன் லிசிக்கி 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் நடியா பெட்ரோவாவையும், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிக்கி பெர்ட்டன்ஸையும் தோற்கடித்தனர்.
ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் தனது முதல் சுற்றில் 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தற்போது விளையாடி வரும் வீரர்களில் 600 வெற்றிகளைப் பதிவு செய்த 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஹெவிட். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (937), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (674) ஆகியோர் 600-க்கும் மேற்பட்ட வெற்றிகளைக் குவித்த மற்ற வீரர்கள்.
மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பெர்னாட் டாமிக் 0-6, 1-6 என்ற நேர் செட்களில் ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினியனிடம் தோல்வி கண்டார். இதுதான் ஏடிபி வரலாற்றில் மிகக்குறைந்த நிமிடங்களில் முடிவடைந்த போட்டி.
மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-7 (8), 10-8 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது. சானியா ஜோடி தங்களின் 2-வது சுற்றில் ஜார்ஜியாவின் அக்ஸானா கேலாஷின்கோவா-ரஷியாவின் அலிசா கிளெய்பனோவா ஜோடியை சந்திக்கிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 3-6, 6-7 (7) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் எரிக் பியூட்டோரக்-ரேவன் கிளாசன் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
பயஸ்-ஸ்டெபானெக் ஜோடி இந்த ஆண்டில் விளையாடிய 5 போட்டிகளில் 3-வது முறையாக முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.