முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் விபத்து: 35 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, மார்ச் 24 - பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் எதிர்த் திசையில் இருந்து வந்த 2 பஸ்கள் மீது, லாரி மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.

இந்த மாகாணத்தின் ஹப் என்ற நகரில் ஆர்சிட் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு சென்று கொண்டிருந்த லாரியின் டயர் திடீரென்று வெடித்ததால் அது நிலை தடுமாறி, எதிரே வந்த 2 பஸ்கள் மீது மோதியது. அவற்றில் முதல் பஸ்ஸில் பயணிகள் இருந்தனர். இரண்டாவது பஸ்ஸில் சட்ட விரோதமாக பெட்ரோல் கண்டேய்னர்கள் வைக்கப்பட்டிருந்ததால், மோதிய வேகத்தில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து, தீபிடித்து எரிந்தது. 

இந்த விபத்தில் முதல் பஸ்ஸில் இருந்து 35 பேர் உடல் இறந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு தீயில் கருகிச் சிதைந்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்