முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்: பாகிஸ்தான் 16 ரன்னில் ஆஸி. அணியை வென்றது

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 24 - டி _ 20 உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியில் நேற்று நடந்த 2_வது பிரிவு முதல் சூப்பர் 10 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் 16 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்னை எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், உமர் அக்மல் அதிரடியாக ஆடி 94 ரன் எடுத்தார். அடுத்தபடியாக கம்ரான் அக்மல் 33 ரன்னும், சாகித் அப்ரிடி 20 ரன்னும் எடுத்தனர். 

இந்தப் போட்டியில் உமர் அக்மல் மற்றும் கம்ரான் அக்மல் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடியதால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது. ஆஸி. சார்பில் கார்ல்டர் நைல் 2 விக்கெட் எடுத்தார். 

192 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கு ஆஸி. க்கு வைக்கப்பட்டது. ஆனால் அடுத்து ஆடிய அந்த அணி 175 ரன்னை மட்டுமே எடுத்தது. 

இதனால் பாக். அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸி. அணி தரப்பில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 33 பந்தில் 74 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. 

பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.  இன்றைய வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்