எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியாமி, மார்ச் 25 - மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் கடும் போராட்டத்துக்குப் பிறகு காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் முன்னாள் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டை தோற்கடித்தார். மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தை 66 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார் நடால்.
வெற்றிக்கு பிறகு பேசிய நடால், “2012-லிருந்து இந்தப் போட்டி யில் விளையாடாத நிலையில் இப்போது மீண்டும் விளையாட வந்திருப்பது சிறப்பானது. எனது வருகையை தெரியப்படுத்த இதுபோன்ற ஒரு வெற்றியோடு தொடங்குவதைவிட சிறந்த வழி எதுவுமில்லை” என்றார்.
ஹெவிட்டுக்கு எதிராக தொடர்ந்து 6-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நடால், அடுத்ததாக உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை சந்திக் கிறார். இஸ்டோமின் தனது 2-வது சுற்றில் 6-7 (8), 6-0, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டிமிட்ரி துர்சுனோவை தோற்கடித்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-0, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேனியல் ஜிமெனோ டிரேவரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் வென்று 18 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த வாவ்ரிங்கா, அடுத்த செட்டை இழந்தார். அது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு மனரீதியாக சில ஏற்ற, இறக்கங்கள் இப் போதும் இருக்கின்றன. 2-வது செட்டில் நான் எதிர்மறையான எண்ணத்துடன் ஆடியது கொஞ்சம் முட்டாள்தனமானதுதான். எனினும் 3-வது செட்டை சிறப்பாகத் தொடங்கியதில் மகிழ்ச்சியே” என்றார்.
போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளவரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-6 (5), 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்டையும், போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-7 (5), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான டொனால்டு யங்கையும் தோற்கடித்தனர்.
போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து 3-வது சுற்றில் விளையாடவிருந்த ஜெர் மனியின் புளோரியன் மேயர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
போராடி வென்ற செரீனா
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கடும் போராட்டத் துக்குப் பிறகு 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவைத் தோற் கடித்தார். இந்த ஆட்டத்தின் 3-வது செட்டில் 5 கேம்கள் முடிந்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
மியாமி மாஸ்டர்ஸில் 7-வது பட்டம் வெல்லும் கனவில் இருக்கும் செரீனா, இந்தப் போட்டியில் 63-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இங்கு இதுவரை 70 போட்டிகளில் விளை யாடியிருக்கும் செரீனா 7-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளார்.
கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான மரியா ஷரபோவாவும் கடும் போராட்டத்துக்குப் பிறகே தனது 3-வது சுற்றில் வெற்றி கண்டார். அவர் 6-4, 6-7 (7), 6-2 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவைத் தோற்கடித்தார். இந்த போட்டியில் ஷரபோவா 8 டபுள் பால்ட் தவறுகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
தகுதி நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான் டேவெக் 5-7, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீராங் கனையான ஆஸ்திரே லியாவின் சமந்தா ஸ்டோசருக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
பூபதி ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஜோடி 4-6, 6-4, 6-10 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பேயா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானக் ஜோடியும் முதல் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர், பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் கேபல்-ராபர்ட் ஃபராஹ் ஜோடியை சந்திக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.