முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

சாண்டியாகோ, மார்ச் 26 - சிலி நாட்டில் வட்மேற்கு கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் குலுங்கினர். பொதுமக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

பசுபிக் கடற்கரை நகாரன இகுயாகியில் 6.1 ரிக்டர் அளவில் கடலுக்குல் 6 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் 100 கிலோ மீட்டர் வரை எதிலொலித்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. சிலி கடற்கரை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 16-ஆம் தேதியும் இங்கு 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது சுமார் 500 பேர் பலியானார்கள். 1,831 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்