முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நிலச்சரிவில் பலி 14 ஆக உயர்வு - 176 பேர் மாயம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.26 - அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் அருகேயுள்ள ஓசோ என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 30 வீடுகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். இடிபாடுகளை அகற்றியது போது 8 பிணங்கள் மீட்கபட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பலியானவர்கள் தவிர 176 பேரை காணவில்லை. எனவே மாயமான அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்