முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க கேப்டனுக்கு அபராதம்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 27 - நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. ஆனால் பந்து வீச்சின் போது தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் எடுத்துக் கொண்டது. 

ஐ.சி.சி. விதிமுறைப்படி ஒரு ஓவர் வரை தாமதமாகப் பந்து வீசினால் கேப்டன் தன் ஊதியத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்கள் பத்து சதவீதமும் அபராதம் செலுத்த வேண்டும். 

இரண்டு ஓவர்கள் தென் ஆப்பிரிக்கா தாமதமாக வீசியதாக ஐ.சி.சி. மேட்ச் ரெப்ரி ஜவஹல் ஸ்ரீநாத் அறிக்கை தாக்கல் செய்தார். 

இதனால் கேப்டன் டுபெளிசிசுக்கு 40 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்