முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் 529 பேருக்கு தூக்கு: அமெரிக்கா எதிர்ப்பு

வியாழக்கிழமை, 27 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 28 - எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு விதிக்கப்பட்ட ஒட்டு மொத்த மரண தண்டனையை நிறைவெற்றக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடராபாளர் மேரி ஹார்ஃப் கூறியதாவது: எகிப்தில் மோர்சியின் ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இத்தகைய மரண தண்டனை அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு ஒட்டு மோத்தமாக 529 பேருக்கு மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதாகும்.

இதில், சமரசம் செய்துக்கொள்ள முடியாது. இந்த தண்டனை மனச்சாட்சிக்கு விரோதமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்