முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை மருந்து கும்பலை சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வேராகுரூஸ், மார்ச் 30 - மேக்ஸிக்கோவில் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அக்கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேராகுரூஸ் மாகாணத்தில் பெரோட் நகரில் ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து 10 துப்பாக்கிகள் மற்றும் போலீஸ் உடைகள், தொப்பிகள் ஆகியவை கைபற்றப்பட்டனர். இந்த மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்