முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜூன் 1 - இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். பயிற்சி முடித்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க இந்திய எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லைப்புற ராணுவ முகாம் ஒன்றை நோக்கி ஒரு தீவிரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றான். அப்போது அவனை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அந்த தீவிரவாதியை நிற்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பாகிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டான். அவன் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவனது சடலத்தை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்