முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூரில் 6 கார்கள் உள்பட 41 வாகனங்கள் எரிந்து சாம்பல்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

நாக்பூர், ஜூன் 1 - நாக்பூரில் ஒரு கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்ததில் அதில் ஏற்றப்பட்டிருந்த 6 கார்களும்  அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 மோட்டார் சைக்கிள்களும்  எரிந்து சாம்பலாயின. அரியானா மாநிலம் குர்காவூன் நகரில் இருந்து 6 கார்களுடன் ஒரு கன்டெய்னர் லாரி நாக்பூருக்கு வந்தது. நாக்பூரின் புறநகர்ப் பகுதியான பார்டி என்ற இடத்தில் இந்த லாரி வந்து கொண்டிருந்த போது அதில் திடீர் என்று தீப்பிடித்துக்கொண்டது.

இதை அடுத்து அந்த லாரி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து சாம்பலாயின.  கன்டெய்னர் லாரியில் இருந்த 6 கார்களும் தீயில் எரிந்து சாம்பலாயின.

உள்ளூர் கார் ஷோ ரூமுக்கு  இந்த  கார்களை கொண்டு சென்ற போதுதான் இந்த  பயங்க  தீவிபத்து நடந்துள்ளது.

கார் ஷோரூமிற்கு சென்ற  லாரி அங்கே கார்களை அன்லோடு செய்வதற்காக காத்திருந்தது.  அப்போது அந்த  லாரியில் புகை வெளியேறி வருவதை பார்த்த வழிப்போக்கர்கள் அபாய குரல் எழுப்பினார்கள். ஆனால் அதற்குள் அந்த லாரி தீயால் சூழப்பட்டு திடீர்  என வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ லாரியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சூழ்ந்தது.

அந்த கன்டெய்னர் லாரியில் இருந்த டீசல்  டேங்கில் தீ பிடித்து அது பிறகு வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தீ அணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் 6 கார்கள் மற்றும் 35 இரு சக்கர வாகனங்கள்  ஆகியவை இந்த தீ விபத்தில் சேதம் அடைந்தன. கார்களை ஏற்றி வந்த லாரியும் எரிந்து சாம்பலானது.

 இது குறித்து நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்