முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாமில் பஸ் குளத்தில் விழுந்து 26 பேர் பலி

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஜூன் 1 - அஸ்ஸாம் மாநிலத்தில் திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உள்பட 26 பேர் பரிதாபமாக பலியானார்கள்.அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து திபு என்ற இடத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  சிலர் ஒரு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பஸ்சில் மொத்தம் 40 பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. 

காம்ரூப் மாவட்டத்தில் ஒரு ஏரியை கடக்க வேண்டியிருந்தது. அந்த ஏரியினை கடக்க மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மரப்பாலம் வழியாக அந்த பஸ் சென்ற போது அந்த மரப்பாலம் உடைந்து குளத்தில் பஸ் கவிழ்ந்து விழுந்தது. குளத்தில் பாய்ந்த பஸ் 40 அடி ஆழ தண்ணீரில் மூழ்கியது. 

சம்பவம்  பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான கிராம மக்களும் மீட்பு குழுவினரும்  விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இருந்தாலும் 8 பெண்கள் உள்பட 26 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

இந்த சம்பவம் ராஜாபாரி என்ற இடத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

குளத்தில் இருந்து இதுவரை 6 பயணிகள்  மட்டும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டனர்.

குளத்தில் மூழ்கிய பஸ் கிரேன் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டது. 

மீட்பு பணியில்  ராணுவத்தினரும் உள்ளூர் பொதுமக்களும் ஈடுபட்டனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

காணாமல் போன பயணிகளை தேடும் பணிகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்