முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லைட்டரை குழந்தை பற்ற வைத்ததால் விபத்து: 12 பேர் சாவு

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப்.5 - சீனாவில் சிகரெட் லைட்டரை குழந்தை விளையாட்டாக பற்ற வைத்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து குவாண்டாங் மாகாண பணிப் பாதுகாப்பு படை நிற்வாக அதிகாரிகள் கூறியதாவது: தென் சீன பகுதியில் உள்ள ஒரு கைத்தறிய ஆலையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஆலை உரிமையாளரின் குழந்தை சிக்ரெட் லைட்டரை வைத்து விளையாடியது. அப்போது எதிர்பாராமல் லைட்டரை அந்த குழந்தை பற்ற வைத்ததால் அங்கிருந்த பஞ்சு மூட்டையில் தீப்பொறி பற்றியதில் பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். தொழ்லாளர்கள் பலர் காயம் அடைந்தனர். விசாரணையில் முறையான அனுமதி பெறாமல் தனது வீட்டின் ஒரு பகுதியில் அந்த தொழிற்சாலையை நடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் சீனாவில் ரு தொழிர்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 120 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். சீனாவில் சமிபகாலமாக தொழிர்சாலைகளில் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்