முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். முலம் எனது திறமையை நிருபிக்க தேவையில்லை

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.10 - இங்கிலாந்து அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்ததால் அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான  அணியில் இருந்து அவரை கழற்றிவிட்டது.சிறந்த பேட்ஸ்மேனான பீட்டர்சன் நீக்கம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் கூக் இங்கிலாந்து வாரியத்தின் முடிவை நியாயப்படுத்தி இருந்தார். அவர் நீக்கம் சரியானதே என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டி மூலம் எனது திறைமையை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்று பீட்டர்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். அங்கிருந்து விலகி இருப்பது எனக்கு நன்றாகவே இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். எனது திறமையைநிரூபிப்பதற்காக ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. யாருக்காகவும் எனது திறமையை நிரூபிக்க தேவையில்லை. ஏனென்றால் நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி விட்டேன். ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை காயம் காரணமாக விளையாடவில்லை. இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.

பீட்டர்சனை டெல்லி டெர்டெவில்ஸ்  அணி ரூ.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் டெல்லி அணிக்கு அவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்