முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி விவகாரம்: பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.11 - ஐபிஎல் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் டோனியிடம் முகுல் முத்கல் விசாரணைக் குழு பதிவு செய்த வாக்குமூல விவரங்களை வழங்கக்கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு முன்னிலையில் பிசிசிஐ வழக்குரைஞர் சி.எஸ்.சுந்தரம் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரித்த முகுல் முத்கல் குழு கிரிக்கெட் வாரியக்குழு ஸ்ரீனிவாசன், இந்திய அணியின் கேப்டன் டோனி உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற்றது. ஸ்ரீனிவாசன், டோனி ஐபிஎல் செயலாக்க அலுவலகர் சுந்தர ராமன் ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூல விவரங்கள் வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் சூதாட்டப் புகார் வழக்கில் வாதிடுவதற்கு தேவைப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.எஸ்.சுந்தரம் விளக்கினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்